காங்கோவில் கட்டுப்பாடின்றி பரவும் இபோலா வைரஸ்; 506 பேர் உயிரிழப்பு

8 ஜூலை 2026, 1:45 AM
காங்கோவில் கட்டுப்பாடின்றி பரவும் இபோலா வைரஸ்; 506 பேர் உயிரிழப்பு
காங்கோவில் கட்டுப்பாடின்றி பரவும் இபோலா வைரஸ்; 506 பேர் உயிரிழப்பு

காங்கோ, ஜூலை 8 - காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் இபோலா (Ebola) வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும், மக்களின் இடப்பெயர்வு காரணமாக இந்நோய் புதிய பகுதிகளுக்கும் தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

காங்கோவில் இதுவரை 1,561 பேருக்கு இபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 506 பேர் பலியாகியுள்ளனர். இபோலா வைரஸின் அரிய வகையான 'புண்டிபூகியோ' (Bundibugyo) வீரியத்தால் ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்பு இதுவாகும்.

இந்த குறிப்பிட்ட வகைக்கு இதுவரை நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையோ அல்லது முழுமையான குணப்படுத்தும் மருந்தோ இல்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இபோலா சிகிச்சை மையங்கள் ஏற்கனவே 90 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. மேலும், மொங்ப்வாலு (Mongbwalu) என்ற சுரங்க நகரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போது உள்ளூரிலேயே சிகிச்சை பெறாமல், தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணிப்பதால் நோய் புதிய பிராந்தியங்களுக்கும் வேகமாகப் பரவுகிறது.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆவர். மே மாதப் பாதியில் இந்த இபோலா பரவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான பூட்ஸ் காலணிகள், கையுறைகள் மற்றும் நீர்ப்புகா ஆடைகள் (Waterproof overalls) போன்ற அத்தியாவசியப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலேயே பல சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் பணிபுரிந்து வருகின்றனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.