வீட்டு பின்புறம் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்

21 ஜூன் 2026, 7:25 AM
வீட்டு பின்புறம் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்

ஷா ஆலம், ஜூன் 21: சுபாங் ஜெயா, தாமான் பூச்சோங் பிரிமா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் புகார் பெறப்பட்டது என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்ததார்.

விசாரணையில் எவ்வித சொத்து இழப்போ சேதமோ ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சுபாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தை 03-7862 7222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.