8 ஆண்டு காலக் காத்திருப்பு முடிவுற்றது: மைசெல் (MySel) திட்டத்தால் அடையாள அட்டை பெற்றார் டெபோரா

20 ஜூன் 2026, 8:48 AM
8 ஆண்டு காலக் காத்திருப்பு முடிவுற்றது: மைசெல் (MySel) திட்டத்தால் அடையாள அட்டை பெற்றார் டெபோரா

ஷா ஆலாம், ஜூன் 20 — மைசெல் (MySel) திட்டத்தின் உதவியால், 21 வயதான டெபோரா ஸ்டீவன் பாய் என்பவரின் கடந்த எட்டு ஆண்டு கால அடையாள அட்டைக்கான காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தொடங்கிய ஈராண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்திலேயே தனக்கு குடியுரிமை கிடைத்ததாக அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது பிறப்புச் சான்றிதழில் 'குடிமகள் அல்லாதவர்' என்று குறிப்பிடப்-பட்டிருந்ததோடு, தாயாரின் முழுமையான ஆவணங்கள் இல்லாததாலும் தன்னால் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததாக அவர் கூறினார்.

தனது 12 வயது முதல் அடையாள அட்டை பெறுவதற்காகப் போராடி வருவதாகக் குறிப்பிட்ட டெபோரா, இதனால் யு.பி.எஸ்.ஆர் (UPSR) தேர்வு எழுதியபோது பல சவால்களை எதிர்கொண்டதாகவும், மற்றவர்களைப் போல வேலை செய்யவோ அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியாமல் தவித்ததாகவும் கூறினார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் -னிடமிருந்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டப் பின்னர், டெபோரா மெடியா சிலாங்கூர் ஊடகத்திடம் பேசினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.