கேபிள் திருடிய கும்பல்; காவல்துறை தீவிர வேட்டை

7 ஜூன் 2026, 10:03 AM
கேபிள் திருடிய கும்பல்; காவல்துறை தீவிர வேட்டை

ஷா ஆலம், ஜூன் 7 – மத்திய வட்டச் சாலை 2 (MRR2) ஓரத்தில் கேபிள்களைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த சில ஆடவர்களைக் காவல்துறையினர் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்துப் பேசிய அம்பாங் ஜெயா மாவட்டப்காவல்துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் கைருல் அன்வார் காலிட், இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் முறையான விசாரணைகளைத் தொடங்கிவிட்டதாகவும், தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று, டிக் டாக் (TikTok) சமூக ஊடகத் தளத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகி வருவதைக் காவல்துறையினர் கண்டறிந்ததாகவும், இது தொடர்பாகக் கடந்த வியாழக்கிழமை அன்றே அதிகாரப்பூர்வப் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இச்சம்பவம் குறித்து மேலும் விளக்கிய கைருல் அன்வார், சம்பவ இடத்தின் வழியே சென்ற உள்ளூர் நபர் ஒருவர், அடையாளம் தெரியாத நான்கு ஆடவர்கள் சாலையோரத்தில் துண்டுகளாக வெட்டப்பட்ட கேபிள்களை ‘ஹோண்டா ஒடிஸி’ (Honda Odyssey) ரகக் கார் ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்ததாகப் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை அனைத்துப் பிரிவுகளையும் முடுக்கிவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.