பாலிங், ஜூன் 2: இங்குள்ள கோலா கெட்டில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை அரிவாள்களுடன் புகுந்த இருவர் கொள்ளையடித்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்குத் தலை, தோள்பட்டை மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டது.
காலை 8.40 மணியளவில் இது குறித்துக் காவல் துறையினருக்குப் புகார் கிடைத்ததாகப் பாலிங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன் பிராண்டன் அனாக் ரிச்சர்ட் ஜோ தெரிவித்தார்.
"காலை 8.10 மணியளவில், வெள்ளி நிற ஹோண்டா மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் பாதிக்கப்பட்டவரை அணுகியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் அரிவாள்கள் இருந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
காயமடைந்த அந்த ஆடவர் மேல் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்கு (HSAH) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்டவர் தனது ரொக்கப் பணத்தையும், தனிப் பட்டப் பொருட்களையும் இழந்துள்ளார். கொள்ளையடிக்கும் போது வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 394-இன் கீழ் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-- பெர்னாமா
அரிவாள்களுடன் வந்த இருவர் கொள்ளையடித்ததில் இளைஞர் காயம்
2 ஜூன் 2026, 5:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
காணாமல் போன பணப்பையிலிருந்து 10,000 ரிங்கிட்டைத் திருடிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது
Latchumy Ramamoorthy
20 ஜூன் 2026

video
Boy dies after fall from seventh floor of Kajang apartment
Kathiravan Manoharan, Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்
Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
வீட்டின் பின்புற சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமியை போலீசார் மீட்டனர்
Pakiya
8 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



