சிரம்பான், மே 22: இங்குள்ள ஒரு வீட்டில் நேற்றைய தினம் நான்கு வயது சிறுவன் ஒருவன், அவனது பராமரிப்பாளரான முதியவர் ஒருவரால் துன்புறுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைத் தளங்களில் வைரலான 1 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட இச்சம்பவத்தின் காணொளியைக் கண்ட சிறுவனின் பெற்றோர், நேற்று இரவு 8.01 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
"ஒரு வீட்டின் பின்புறம் அப்பெண் சிறுவனை அடிப்பதைக் காணொளி காட்டுகிறது, மேலும் காணொளியில் இருப்பது தங்கள் மகன்தான் என்பதை பெற்றோர் உறுதிப் படுத்தியுள்ளனர்."
"சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, தங்களது வீட்டிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்தப் பராமரிப்பாளரின் வீட்டிற்கு அந்தச் சிறுவன் அனுப்பப் பட்டுள்ளான்," என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
அச்சிறுவன் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இங்குள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சம்பவம் நடந்த இடத்திலேயே அதே நாள் இரவு 9.45 மணியளவில் 60 வயதுடைய அப்பெண்ணை போலீசார் கைது செய்ததாக அல்சாஃப்னி குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கமருல் ஆரிஃபின் கமாருசாமனை 06-6033222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சிறுவனைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் முதிய பராமரிப்பாளர் கைது
22 மே 2026, 4:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
காணாமல் போன பணப்பையிலிருந்து 10,000 ரிங்கிட்டைத் திருடிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது
Latchumy Ramamoorthy
20 ஜூன் 2026

video
Boy dies after fall from seventh floor of Kajang apartment
Kathiravan Manoharan, Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்
Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
வீட்டின் பின்புற சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமியை போலீசார் மீட்டனர்
Pakiya
8 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



