வங்காளதேசத்தில் ஆண்டுக்கு 24,000 பேர் மரணம் - விழிப்புணர்வு கருத்தரங்கில் எச்சரிக்கை

14 மே 2026, 4:32 AM
வங்காளதேசத்தில் ஆண்டுக்கு 24,000 பேர் மரணம் - விழிப்புணர்வு கருத்தரங்கில் எச்சரிக்கை

டாக்கா, மே 14: பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்புச் சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள் காரணமாக, வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் சுமார் 24,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச உப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பேசிய மருத்துவ நிபுணர்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Ultra-processed foods) மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக எச்சரித்தனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.7 மில்லியன் மரணங்களுக்கு அதிகப்படியான உப்பு நுகர்வு முக்கியக் காரணமாக அமைகிறது.

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய வங்காளதேச உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் (BFSA) உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் முகமட் சோயப், மனித உடலுக்கு உப்பு அவசியமானது என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதய நோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயிற்றுப் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களுக்கு (NCD) வழிவகுப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, உடலில் நீர் தேங்குதல், மூட்டு நெகிழ்வுத்தன்மை குறைதல் மற்றும் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் இது உண்டாக்குகிறது.

2023-ஆம் ஆண்டின் உலகளாவிய நோய் பாதிப்பு ஆய்வின்படி, உலகெங்கிலும் 11 மில்லியன் மரணங்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை. இதில் 1.67 மில்லியன் மரணங்கள் நேரடியாக உணவில் அதிக சோடியம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படுகின்றன.

வங்காளதேசத்தைப் பொறுத்தவரை, நாட்டின் மொத்த மரணங்களில் 71 விழுக்காடு தொற்றாத நோய்களாலேயே நிகழ்கின்றன. இதில் இதய நோய்களால் மட்டும் 34 விழுக்காடு மரணங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு முதிர்ந்த நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஆனால், வங்காளதேசத்தில் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 9 கிராமுக்கும் அதிகமான உப்பை உட்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.

முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு மூலம் இத்தகைய உயிரிழப்புகளை எளிதாகத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"உணவில் உப்பைக் குறைப்போம், உயிரைக் காப்போம்" எனும் முழக்கத்துடன் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.