ஷா ஆலம், ஏப்ரல் 27: குடியிருப்பாளர்கள் தெரிவித்த துர்நாற்றம் குறித்த புகாரைத் தொடர்ந்து, தாமான் தாசிக் தம்பஹானில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் இடம் ஒன்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஏஜே) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில், குப்பை சேகரிப்பு, அகற்றுதல் மற்றும் அழித்தல் (எம்பிஏஜே) துணைச் சட்டம் 2007, பிரிவு 4-ஐ மீறியது கண்டறியப்பட்டதை அடுத்து, எம்பிஏஜே கருவிகளைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தது.
"விசாரணையின் போது, அப்பகுதி சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கட்டுப்பாடற்ற முறையில் குப்பை சேகரித்து கொட்டப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது," என்று அது கூறியது.
எம்பிஏஜே வெளியிட்ட அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட நபர்கள், அப்பகுதியில் மாசுபாடு மற்றும் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்து காலி செய்யுமாறு உத்தரவிட்டது.
"மேலும், இது போன்ற நடவடிக்கைகள் மீண்டும் அப்பகுதியில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதி மூடப்பட்டது."
சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும், சுற்றுச்சூழல் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், பேணப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் எம்பிஏஜே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதக் குப்பைத் தளம் கண்டுபிடிப்பு: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது
27 ஏப்ரல் 2026, 7:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானில் பொது இடங்களில் குப்பை வீசிய 9 பேருக்கு அபராதம்
Media Selangor Team
15 செப்டெம்பர் 2026

selangor
தெலோக் பங்லிமா காராங்: சட்டவிரோதக் குப்பை தளத்தை சுத்தம் செய்து, எச்சரிக்கை பலகை நிறுவியது MPKL
Media Selangor Team
19 ஆகஸ்ட் 2026

selangor
ஹலால் மற்றும் ஹலால் அல்லாத கழிவுப் பிரிப்பு விவகாரம்: சிலாங்கூர் அரசு புதிய வழிகாட்டுதலை மறுஆய்வு செய்யும்
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
சுங்கை பூரோங் கடற்கரையில் 405 கிலோகிராம் குப்பைகள் அகற்றம்; 200 மரக்கன்றுகள் நடப்பட்டன
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?




