பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22: தொடர் கனமழை பெய்தால் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள ஏழு இடங்களை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) அடையாளம் கண்டுள்ளதாக அதன் மேயர் டத்தோ முகமது ஸஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
இந்த அபாயத்தை மாநகராட்சி தீவிரமாகக் கருதுவதாகவும், மீண்டும் வெள்ளம் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சிகளைப் பொருத்தும் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
"முந்தைய வெள்ளச் சம்பவங்களின் அடிப்படையில், கவனம் செலுத்த வேண்டிய ஏழு அபாயகரமான பகுதிகள் இருப்பது கண்டறியப்பட்டது. முதல் கட்டமாக, திடீர் வெள்ள அபாயத்தைச் சமாளிக்க, நான்கு பகுதிகளில் நீர் உறிஞ்சிகளைப் பொருத்தியுள்ளோம்."
"மின்சார இணைப்பை தொலை தூரம் வரை கொண்டு செல்ல வேண்டியிருந்தால் செலவுகள் அதிகரிக்கும் என்பதே இங்குள்ள சிக்கலாகும். அதனால் தான் முதல் கட்டமாக நான்கு பகுதிகளில் மட்டும் நீர் உறிஞ்சிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளவை எதிர்கால ஒதுக்கீடுகளில் சேர்க்கப்படும்," என்று அவர் கூறினார்.
மாநில அரசு செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்லி அஹ்மத் தாஜுடின் கலந்து கொண்ட, 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவை விருது மற்றும் 2026-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளம் தொடர்பான நிலவரம் குறித்து மேலும் கருத்துரைத்த முகமது ஸஹ்ரி, நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேடான் செலெரா 223 வர்த்தகர்களுடன் எம்பிபிஜே ஒரு சந்திப்பை நடத்தும் என்றார்.
"வர்த்தகர்களைப் பாதித்த இப் பிரச்சனையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய மாமன்ற உறுப்பினர்களுடன் இந்தச் சந்திப்பு நடத்தப்படும்," என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் பெட்டாலிங், கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் எட்டு பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டன.
இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிலைமை சீரடைந்து, அன்றிரவு 9 மணியளவில் வெள்ளம் முழுமையாக வடிந்து விட்டதாக சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள ஏழு இடங்களை அடையாளம் கண்டுள்ளது
22 ஏப்ரல் 2026, 4:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
PJ receives EHCC award once again
admin
18 அக்டோபர் 2016

selangor
‘The Colours of PJ’ Festival is back - more vibrant than ever
admin
25 ஆகஸ்ட் 2016

selangor
நம்பிக்கையான பொதுப் போக்குவரத்து: மாநில அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
Shalini Rajamogun
27 ஆகஸ்ட் 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Media Selangor Team
26 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



