ஷா ஆலம், ஏப்ரல் 21: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், மூத்த குடிமக்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள உதவவும், அவர்களுக்கான செயல்பாட்டு மையங்களுக்கு (PAWE) புதிய வழிகாட்டுதல்களை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப் படுத்தவுள்ளது.
சமூக நல ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறுகையில், இந்த வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு முதல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் (PBT) அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சுகாதார அமைச்சின் (KKM) தரவுகளின்படி, 30 விழுக்காடு மூத்த குடிமக்கள் இந்த மூன்று நாள்பட்ட நோய்களையும் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். மூத்த குடிமக்களுக்கான சுகாதாரப் பரிசோதனைத் திட்டம், சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தலைமையில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது," என்றார்.
"மூத்த குடிமக்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு சுகாதார அமைச்சின் கீழ் இருந்தாலும், மாநில அரசு PAWE-இல் நடத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட இவர்களுக்கான செயல்பாடுகளை ஆதரிக்கிறது. எனவே, இந்த ஆண்டு ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திலும் மூத்த குடிமக்களுக்கான செயல்பாட்டு மையங்களுக்கு ஒரு வழிகாட்டுதலை வெளியிட சிலாங்கூர் இலக்கு வைத்துள்ளது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் மத்தியில் நாள்பட்ட நோய்களின் விகிதம் அதிகரித்து வருவது கவலையளிப்பதால் இந்த முயற்சி முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதார மற்றும் நோயுற்றல் ஆய்வின் (NHMS) கண்டுபிடிப்புகளின்படி, மூத்த குடிமக்களில் 39 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாலும், 73 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 76 விழுக்காட்டினர் அதிக கொழுப்பு அளவைக் கொண்டிருப்பதாகவும், 68 விழுக்காட்டினர் மூன்று நாள்பட்ட நோய்களில் குறைந்தது இரண்டையாவது கொண்டிருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 30 விழுக்காட்டினர் இந்த மூன்று நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தரவுகளின்படி, 30.6 விழுக்காடு மூத்த குடிமக்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை என்பதும், 12.8 விழுக்காட்டினர் அதிக நேரம் அமர்ந்தே இருக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
மூத்த குடிமக்களில் 39 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாலும், 73 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்
21 ஏப்ரல் 2026, 2:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor pergiat saringan awal warga emas, kesan penyakit kronik lebih awal
Kathiravan Manoharan
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

video
Increase of Smart Sewa units to 3,000 to help more people own homes in Selangor
Kathiravan Manoharan
17 ஆகஸ்ட் 2026

selangor
'ஸ்மார்ட் சேவா' வீடுகளை 3,000 -ஆக அதிகரிக்கும் முடிவு; சிலாங்கூரில் பலர் சொந்த வீடுகளை வாங்க உதவும்
Ufairah Tarmidzi
17 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



