சிலாங்கூர் கிர் ஜோஹாரி தங்கக் கோப்பையை வென்றது - 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது

16 ஏப்ரல் 2026, 4:29 AM
சிலாங்கூர் கிர் ஜோஹாரி தங்கக் கோப்பையை வென்றது - 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 16 - தேசிய அளவிலான செபாக் தக்ராவ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசிய ராணுவப் படையை (ஏடிஎம்) 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, கிர் ஜோஹாரி தங்கக் கோப்பையைச் சிலாங்கூர் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், மாநில அணியின் 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு சரவாக், கூச்சிங்கில் சிலாங்கூர் அணி இக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி முழுவதும் அனைத்து வீரர்களும் தங்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் சிறப்பாக விளையாடியதே இந்த வெற்றிக்குக் காரணம் என அணியின் தலைவர் பர்ஹான் ஆடம் தெரிவித்தார்.

"அனைத்து வீரர்களும் 100 விழுக்காடு ஈடுபாட்டைக் கொடுத்தனர். இந்தத் தங்கக் கோப்பை போட்டியில் சிலாங்கூர் இன்னும் ஒரு மாபெரும் சக்தி என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அதிகாரப்பூர்வ ஆதரவாளரான
கியூசெல் (KUSEL), இந்த வெற்றியை வீரர்கள், நிர்வாகம் மற்றும் ஆதரவாளர்களின் கூட்டு முயற்சியின் பலன் என்று வர்ணித்துள்ளது.

தேசிய அளவில் சிலாங்கூரின் விளையாட்டுச் சூழல் தொடர்ந்து வலுவாகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது என்று
கியூசெல் குறிப்பிட்டது.

இந்த பெருமைக்குரிய சாதனைக்காக சிலாங்கூர் பிஸ்டன்ஸ் அணிக்கும், டத்தோ ஸஃப்ரி சுலைமான் தலைமையிலான சிலாங்கூர் செபாக் தக்ராவ் சங்கத்திற்கும்
கியூசெல் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.