மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் மருத்துவத்துறைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த மோதலில் இரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஷாராஃ Shargh செய்தித்தாளின் படி, கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சுமார் 40 விழுக்காடு அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக ஈரானிய தடயவியல் மருத்துவ சங்கத்தின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெடி அராணி கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு ஆர்வலர்கள் வெளியிட்ட எண்ணிக்கையில் 3,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருந்ததால், பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நார்வேயை தளமாகக் கொண்ட ஹெங்காவ் மனித உரிமைகள் அமைப்பு, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த மோதலில் 1,030 பொதுமக்கள் உட்பட குறைந்தது 7,650 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், இந்த இறப்பு எண்ணிக்கையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால், புதன்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் விமானத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால், இந்த போர் நிறுத்தம் விரைவில் சிதையக் கூடும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியது, ஆனால் ஈரான் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
10 ஏப்ரல் 2026, 6:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புதல் - டொனால்ட் டிரம்ப்
Shalini Rajamogun
2 ஆகஸ்ட் 2026

antarabangsa
ஜோர்டானில் ஈரான் வான்வழி தாக்குதல்: 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
ஈரானில் அமெரிக்க தாக்குதல்: 116 தொலைத்தொடர்பு கோபுரங்கள் முடக்கம், இணையம் & தொலைபேசி சேவைகள் பாதிப்பு
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
ஈரான் தாக்குதலால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



