மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் மருத்துவத்துறைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த மோதலில் இரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஷாராஃ Shargh செய்தித்தாளின் படி, கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சுமார் 40 விழுக்காடு அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக ஈரானிய தடயவியல் மருத்துவ சங்கத்தின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெடி அராணி கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு ஆர்வலர்கள் வெளியிட்ட எண்ணிக்கையில் 3,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருந்ததால், பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நார்வேயை தளமாகக் கொண்ட ஹெங்காவ் மனித உரிமைகள் அமைப்பு, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த மோதலில் 1,030 பொதுமக்கள் உட்பட குறைந்தது 7,650 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், இந்த இறப்பு எண்ணிக்கையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால், புதன்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் விமானத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால், இந்த போர் நிறுத்தம் விரைவில் சிதையக் கூடும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியது, ஆனால் ஈரான் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
10 ஏப்ரல் 2026, 6:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
2026 உலகக் கிண்ணம்: பயணத் தடை குறித்து FIFA-விடம் முறையிட்டது ஈரான்
Kathiravan Manoharan
20 ஜூன் 2026

national
அமெரிக்கா - ஈரான் அமைதி உடன்படிக்கை; பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
ஈரான் உடனான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது; அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி
Shalini Rajamogun
16 ஜூன் 2026

antarabangsa
ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் ராணுவத் தாக்குதல்; அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
Shalini Rajamogun
15 ஜூன் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



