பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது

3 ஏப்ரல் 2026, 7:20 AM
பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பறிமுதல் செய்தது

ஷா ஆலம், ஏப்ரல் 3 - பண்டான் பெர்டானா வர்த்தகப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கையில், பொது வாகன நிறுத்துமிடங்களில் இடையூறாக இருந்த 20 பொருட்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) பறிமுதல் செய்தது.

இந்த நடவடிக்கையின்போது, பொதுமக்கள் வாகன நிறுத்தும் வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பொருட்களை வைத்திருந்த தனிநபர்கள் அல்லது தரப்பினருக்கு எதிராக 67 சம்மன்களும் வழங்கப்பட்டன.

"பொதுப் பயன்பாட்டைப் பாதிக்கும் வகையில், வாகன நிறுத்துமிடங்களைத் தடுப்பதற்காகப் பொருட்களை வைத்திருந்தது கண்டறியப்பட்ட தரப்பினர் மீது பறிமுதல் மற்றும் சம்மன் நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று எம்பிஏ
ஜே முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொது வசதிகள் நியாயமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணவும் இந்த அமலாக்க நடவடிக்கை அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நகராண்மை
கழகம் உறுதியளித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஏதேனும் புகார்கள் அல்லது தகவல்கள் இருந்தால், அவற்றை எம்பிஏ
ஜே பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலமாகவோ அல்லது 1-800-22-8100 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ தெரிவிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.