மூத்த குடிமக்களுக்கான மெஸ்ரா திட்டம் (SMUE) மற்றும் சிறப்புத் தேவையுடையோ-ருக்கான மெஸ்ரா திட்டம் (SMIS) ஆகியவற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டு கோரிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இது ஏப்ரல் முதல் ஜூன் வரை பிறந்த உறுப்பினர்களுக்கானது.
இந்தக் கோரிக்கை ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சிலாங்கூர் மரபுடைமை அறக்கட்டளை (YAWAS) தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் தங்களின் வாக்குப்பதிவு பகுதிக்குட்பட்ட மாநில சட்டமன்ற சேவை மையங்களில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். சரிபார்ப்பு நோக்கங்களுக்காக உறுப்பினர்கள் தங்களது அசல் அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டும்.
இதற்கிடையில், இந்தத் திட்டத்திற்கான புதிய பதிவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.
மெஸ்ரா திட்டம் மற்றும் பற்றுச்சீட்டு கோரிக்கை தொடர்பான கூடுதல் தகவல்களை mesra.yawas.com.my என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 03-5481 8800 என்ற எண்ணில் YAWAS-ஐத் தொடர்புகொண்டு பெறலாம்.
சிலாங்கூர் 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU) பயனடையும் இந்த மெஸ்ரா திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு 55 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
//mediaselangor.com/ms/2026/04/350137
ஏப்ரல் முதல் ஜூன் வரை பிறந்த சிலாங்கூர் மூத்த குடிமக்கள் மெஸ்ரா திட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பற்றுச்சீட்டுகளை பெறலாம்
1 ஏப்ரல் 2026, 4:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உதவி திட்டங்கள் தொடர்பான தவறான புரிதல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் - அதிகாரப்பூர்வத் தளங்களை நாட பொதுமக்களுக்கு அறிவுறுத்து
Shalini Rajamogun
29 டிசம்பர் 2025

selangor
புக்கிட் காசிங் தொகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள், ஜனவரி 20 முதல் RM150 மதிப்புள்ள SMUE வவுச்சர்களைப் பெற்றுக்கொள்ளலாம்
Shalini Rajamogun
12 ஜனவரி 2026

video
Tuntutan baucar beli-belah RM150 sebelum esok
Kathiravan Manoharan
30 செப்டெம்பர் 2025

---
JURNAL BERITA - MB:Tender Jambatan ke-3 Klang akhir Feb ini
admin
17 பிப்ரவரி 2014
உங்கள் கருத்து என்ன?




