அலோர் ஸ்டார், மார்ச் 29: கோத்தா ஸ்டார் மற்றும் பெண்டாங் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறை அமல்படுத்தப்படும்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மார்ச் 26 முதல் 28 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இவ்விரு மாவட்டங்களிலும் நிலை 2 வெப்ப அலை பதிவானதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெடா மாநில கல்வித் துறை (JPN) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"வெப்பமான காலநிலையில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இந்த பி.டி.பி.ஆர். அமல்படுத்தப்படுகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கோத்தா ஸ்டார் மற்றும் பெண்டாங் மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையில் உள்ள மொத்தம் 206 பள்ளிகளில் இந்த அமலாக்கம் அடங்கும்.
"பி.டி.பி.ஆர். அமலாக்கக் காலத்தில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பினால், தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த நாள் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கெடா மாநில கல்வித் துறை தற்போதைய வானிலை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பள்ளிகளின் செயல்பாடு குறித்த மேல் தகவல்களை அவ்வப்போது அறிவிக்கும்.
"மாணவர்களின் நலனுக்காக, பி.டி.பி.ஆர். தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
கெடாவில் இரு மாவட்டப் பள்ளிகளில் இல்லிருப்பு கற்றல் மற்றும் கற்பித்தல் முறை அமல்
29 மார்ச் 2026, 6:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கெடாவின் நான்கு மாவட்டங்களில் இரண்டாம் நிலை வெப்ப அலை எச்சரிக்கை
Shalini Rajamogun
29 மார்ச் 2026

national
கெடா மாநிலத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூசச் சிறப்பு விடுமுறை: மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Mavitthran
22 ஜனவரி 2026

national
கார்கள் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
Shalini Rajamogun
19 ஜனவரி 2026

national
கால்நடை வளர்ப்பு திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரை எம். ஏ. சி. சி தடுத்து வைத்தது
Pakiya
5 டிசம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




