பண்டார் பெர்மைசூரியில் விபத்தில் உயிரிழந்த இரு தரைப்படை இராணுவ வீரர்களுக்கு ராணுவ மரியாதை செய்யப் பட்டன

17 மார்ச் 2026, 6:59 AM
பண்டார் பெர்மைசூரியில் விபத்தில் உயிரிழந்த இரு தரைப்படை இராணுவ வீரர்களுக்கு ராணுவ மரியாதை செய்யப் பட்டன

கோத்தா பாரு, மார்ச் 17: கோலா திரங்கானு-கோத்தா பாரு சாலையில் உள்ள பண்டார் பெர்மைசூரி, கிமீ 70-இல் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இரு தரைப்படை இராணுவ வீரர்களின் உடல்கள், இன்று இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டன.

21 வயதான முஹம்மது அமினுதீன் அம்ரான், இங்குள்ள முலோங், கம்போங் பின்ஜாய் இஸ்லாமியக் கல்லறையில் அதிகாலை மணி 4.35-க்கு அடக்கம் செய்யப்பட்டார். அதேவேளையில், 36 வயதான முகமது ஷாகிரான் சைதி, பாசிர் மாஸ், புனுட் சூசு, கம்போங் கெடோண்டோங் ஹிலிர் இஸ்லாமியக் கல்லறையில் காலை மணி 10.35-க்கு அடக்கம் செய்யப்பட்டார்.

ஜொகூர், தெப்ராவ், பிரிகேட் 7 பட்டறையில் பணிபுரிந்த முகமது ஷாகிரான் மற்றும் முஹம்மது அமினுதீன் ஆகிய இருவரும், விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணம் செய்த ஹோண்டா சிவிக் கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர்.

கோலா திரங்கானுவிலிருந்து கோத்தா பாருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்புறம் இருந்த பாதையில் நுழைந்து ஒரு டிரெய்லர் லாரியுடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப் படுவதாக செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது ஜைன் மாட் டிரிஸ் கூறினார்.

இந்த மோதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் கார் மீண்டும் எதிர்ப்புறப் பாதைக்குச் சரிந்து, ஒரு புரோட்டான் சாகா கார் மீது உரசி, பின்னர் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள கூரையிடப்பட்ட கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரோடுவா அல்சா கார் மீது மோதியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.