முறையான உரிமம் இல்லாமல் மானிய சமையல் எண்ணெயை பதுக்கி வைத்து கும்பல் ஒன்றை KPDN முறியடித்துள்ளது

11 மார்ச் 2026, 6:00 AM
முறையான உரிமம் இல்லாமல் மானிய சமையல் எண்ணெயை பதுக்கி வைத்து கும்பல் ஒன்றை KPDN முறியடித்துள்ளது

ஷா ஆலாம்: முறையான உரிமம் இல்லாமல் மானிய சமையல் எண்ணெயை பதுக்கி வைத்து வணிகம் செய்ய முயன்ற கும்பல் ஒன்றை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) முறியடித்துள்ளது.

நேற்று முன்தினம், புத்ரா ஜெயாவிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் KPDN அமலாக்கப் பிரிவின் 'ஓப்ஸ் கெராக்' நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கும்பலின் செயல் அம்பலமானது.

சோதனையின் போது, 78 பெட்டி மானிய சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டதாக KPDN அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் தெரிவித்தார். ஒவ்வொரு பெட்டியிலும் 17 ஒரு கிலோ கிராம் (kg) பாக்கெட்டுகள் இருந்தன.

மொத்தமாக, அந்த வளாகத்தில் சுமார் 1,326 கிலோகிராம் சமையல் எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM5,569.20 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

சோதனையின் போது, அந்த வளாகத்திற்கு வேலி இல்லை என்றும், அங்கு யாரும் இல்லை என்றும் அஸ்மான் தெரிவித்தார். வளாகத்தைச் சுற்றி மேலும் சோதனை நடத்திய பிறகு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

வாகனத்தைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் ஆடவர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து, அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதன்பின், அந்த நபர் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலதிக விசாரணைக்காக வளாகத்தின் சோதனை அறிக்கை மற்றும் பறிமுதல் ஒப்புதல் வாக்குமூலம் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

விநியோகக் கட்டுப் பாட்டாளரின் முறையான உரிமம் இல்லாமல் கட்டுப்பாட்டுப் பொருட்களை வணிகம் செய்யும் நோக்கில் வைத்திருந்த குற்றத்திற்காக, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961-இன் பிரிவு 21 மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1974, விதி 3(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

"பயனர்களின் நலன்களைப் பாதிக்கும் மற்றும் மானிய இழப்புக்கு வழிவகுக்கும் மானியப் பொருட்களின் முறைகேடுகளை ஒழிக்க, KPDN தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்," என்று அவர் மேலும் கூறினார்.

கட்டுப்பாட்டுப் பொருட்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 019-8488000 என்ற வாட்ஸ்அப் எண், 1-800-886-800 என்ற ஹாட்லைன், 
http://eaduan.kpdn.gov.my என்ற இணையதளம் அல்லது Ez ADU KPDN ஸ்மார்ட்போன் செயலி மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.