கேரி தீவில் உள்ள கோவில்களின் நிலப் பிரச்சனையைத் தீர்க்க தோட்ட நில உரிமையாளர்களுடன் சந்திப்பு

25 பிப்ரவரி 2026, 2:37 AM
கேரி தீவில் உள்ள கோவில்களின் நிலப் பிரச்சனையைத் தீர்க்க தோட்ட நில உரிமையாளர்களுடன் சந்திப்பு

ஷா ஆலம், பிப் 25: கோல லங்காட், கேரி தீவு சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உள்ள வழிபாட்டு தளங்களின் கட்டுமானம் தொடர்பான பிரச்சனையை தீர்க்க SD Guthrie Berhad மற்றும் Sime Darby தோட்ட நில உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளனர்.

சம்பந்தப்பட்ட சில கோவில்கள் நில உரிமையாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி பெறாததால் நடவடிக்கை அவசியம் என பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சிக் மற்றும் தாவோ சமயங்களுக்கான சிறப்பு குழுவின் (லிமாஸ்) தலைவர் வி. பாப்பாராய்டு தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு சிறந்த தீர்வை கண்டறிவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நில உரிமையாளர்களான நிறுவனங்களிடமிருந்து வரும் எந்தவொரு கருத்துகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகப் பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

“26 கோவில்களில் சுமார் பாதி கோவில்களுக்கு நில உரிமை இல்லை. ஆகையால் எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்சனையும் எழாமல் இருக்க அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்போம்.

இந்தக் கோவில்களில் பெரும்பாலானவை பல தசாப்தங்களுக்கு முன்பு, குறிப்பாக 1990-களில் கட்டப்பட்டவை. முன்னர் இங்கு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வருகை புரிந்தனர்.

எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறுவதற்கு முன் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்குமுன் நில உரிமையாளர்களின் தீர்மானத்திற்குக் காத்திருப்போம்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

முன்னதாக, தனது அலுவலகத்தில் கோவில்களின் பிரதிநிதிகள் மற்றும் கோல லங்காட் நகராண்மை கழகக் கவுன்சிலர்களுடன் பாப்பாராய்டு ஒரு சந்திப்பை நடத்தி, அந்தந்த வழிபாட்டுத் தலங்களின் மேலாண்மை, மேம்பாடு மற்றும் நலன் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்தார்.

இதில் மலேசியா இந்து சங்கம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோவில்களின் நிலை, சட்ட அம்சங்கள், நிர்வாகம் மற்றும் எதிர்கால மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தனர்.

வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுப்பதற்கும் சிலாங்கூரில் சட்டவிரோதக் குடியேற்றங்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் ஒரு முயற்சியாக லிமாஸ் நிறுவப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் மற்றும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.