ஷா ஆலம், பிப் 20: நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து ரவாங்கில் உள்ள BTP (பண்டார் தாசிக் புத்ரி) ரமலான் சாந்தாய் பஜாரில் இருந்த பல கூடாரங்கள் பலத்த காற்றால் சேதமடைந்தன.
மாலை 4.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில் உணவு, பானங்கள் மற்றும் விற்பனையாளர்களின் உபகரணங்களும் சேதமடைந்தன. ஆனால், யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை, சிறிது நேரத்திலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகப்படியான நன்கொடைகளிலிருந்து மாற்று கூடாரங்களை தனது தரப்பு உடனடியாகத் ஏற்பாடு செய்ததாகப் பஜாரின் ஏற்பாட்டாளர் முகமட் ஃபாஸி அபு பக்கர் கூறினார்.
"போக்குவரத்து மேலாண்மை, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கண்காணித்தல் தவிர, வானிலை நிலைமைகள் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் சிறப்பாகக் கையாள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.
முன்னதாக, ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான கடைகள் வரிசையாக இருந்ததற்காக இந்த பஜார் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது 300க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட நாட்டின் மிக நீளமான பஜாரில் ஒன்றாகும்.
பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் மற்றும் மண்டலம் 18 குடியிருப்பாளர் குழுவுடன் இணைந்து லோ யாட் குழுமம் முக்கிய அமைப்பாளராகவும் ஆதரவாளராகவும் செயல்பட்டு, பண்டார் தாசிக் புத்ரியை வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) திட்டமிட்டுள்ளது.


