தாமான் இகோ ரிம்பா மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது - ஜேபிஎன்எஸ்

3 பிப்ரவரி 2026, 2:57 AM
தாமான் இகோ ரிம்பா மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது - ஜேபிஎன்எஸ்

ஷா ஆலம், பிப் 3: சிலாங்கூர் மாநில வனத்துறையின் (ஜேபிஎன்எஸ்) மேற்பார்வையின் கீழ் உள்ள அனைத்து வன பூங்காக்கள் மற்றும் மலை ஏறும் பாதைகள் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு முன் பொதுமக்கள் அனுமதி பெற, forestry.selangor.gov.my என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அத்துறை முகநூலில் தெரிவித்துள்ளது.

"பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து மலை ஏறும் நபர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மழைக்காலம் காரணமாக ஜேபிஎன்எஸ் நவம்பர் 17, 2025 முதல் ஜனவரி 31, 2026 வரை அனைத்து மலை ஏறும் பாதைகளையும் மூடியிருந்தது,

செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் வனப்பகுதிகளில் நுழைவது பிரிவு 47, தேசிய வனவியல் சட்டம் 1984 இன் கீழ் ஒரு குற்றமாகும் என்பதையும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் RM10,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.