கோலாலம்பூர் ஜன 30- எதிர்வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
மலேசிய திருநாட்டில் முருகன் திருத்தலத்தில் தைப்பூசம் திருவிழா கலை கட்டியிருக்கும்.
பக்தி நெறியோடு தைப்பூசத்தைக் கொண்டாடி மகிழ்வோம். அதே சமயம் சுத்தத்தை பேணுவோம் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் பத்துமலைக்கு வருகை தரவுள்ளார்.
தைப்பூசக் கொண்டாட்ட ஏற்பாட்டின் இறுதி ஏற்பாடுகளை அவர் மேற்பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


