கோலா லங்காட், ஜன 30: சிலாங்கூர் மறுசுழற்சி திட்டத்தை (SELKitar) விரிவுபடுத்துவதற்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் கோல லங்காட் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒத்துழைப்பின் மூலம், இவ்வாண்டு முழுவதும் கோல லங்காட் நகராண்மை கழகம் (MPKL) அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள 30 பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) SELKitar திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
"இந்தத் திட்டத்தில் விளக்கவுரைகள் மற்றும் விழிப்புணர்வுப் பேச்சுக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், அத்துடன் பள்ளி ஊழியர்களால் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதற்கு வசதியாக ``MPKL Eco Cash`` கவுண்டரைத் திறப்பது ஆகியவை அடங்கும்.
"KDEBWM மற்றும் கோல லங்காட் PPD இடையேயான ஒத்துழைப்பு மூலம் மொத்தம் நான்கு இடைநிலைப் பள்ளிகள், 21 தேசியப் பள்ளிகள் மற்றும் ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், SELKitar திட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மற்றும் உயர்கல்வி நிறுவனத்திற்கும் மறுசுழற்சி தொட்டிகள் மற்றும் RM300 இன்டென்சிவ் ரொக்கம் வழங்கப்படும் என்று KDEBWM நிர்வாக இயக்குனர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.
“3R (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) மறுசுழற்சி தொட்டிகள் சிறிய அளவுகளில் வழங்கப்படும், இதனால் பள்ளிகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிப்பது எளிதாகவும் முறையாகவும் இருக்கும்,`` என்றார் அவர்.
“இந்த அழகான தொட்டிகள் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும்,” என்றும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், சமூக மட்டத்தில் மறுசுழற்சி திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களுக்கும் (PBT) RM30,000 வழங்க மாநில நிர்வாகக் குழு (MMKN) ஒப்புதல் அளித்தது.


