2026 “மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்” திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பத்து தீகா தொகுதியில் திறக்கப்பட்டுள்ளன

28 ஜனவரி 2026, 1:42 AM
2026 “மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்” திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பத்து தீகா தொகுதியில் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 28 - 2026 மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்திற்கான விண்ணப்பத்தைப் பத்து தீகா தொகுதியின் சமூக சேவை மையம் திறந்துள்ளது.

புதிய பள்ளி அமர்விற்கு மாணவர்களும் பெற்றொர்களும் தயாராக உதவும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷீத் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கான பதிவு ஜனவரி 27 தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் பூர்த்தி ஆகும் வரை நடைபெறும் என முகநூலில் அறிவிக்கப்பட்டது. அனைவரும் முன்பே பதிவு செய்து, தங்கள் இடத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தாரர்கள் 5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் மற்றும் பத்து தீகா தொகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.

இந்த உதவிக்கு பத்து தீகா தொகுதியின் சமூக சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என டேனியல் தெரிவித்தார்.

பதிவின் போது பெற்றோரின் அடையாள அட்டையின் நகல், MyKid அல்லது மாணவர் அடையாள அட்டையின் நகல், மற்றும் சம்பளச் சீட்டு அல்லது வருமானச் சரிபார்ப்புக் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் 03-5524 5623 அல்லது 013-417 0041 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.