வட கிள்ளானில் நிகழ்ந்த கொலை சம்பவம்; சிலாங்கூர் மாநில போலீஸ் விசாரணை

20 ஜனவரி 2026, 9:09 AM
வட கிள்ளானில் நிகழ்ந்த கொலை சம்பவம்; சிலாங்கூர் மாநில போலீஸ் விசாரணை

கிள்ளான், ஜன 20- கிள்ளான் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் 31 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் இன்று காலை மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலாங்கூர் போலீஸார் அச்செய்தியைக் கொலை வழக்காக விசாரணை செய்து வருகின்றனர்.

இன்று காலை 7.26 மணியளவில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கிள்ளான் வடக்கு மாவட்ட போலீஸ் தலைமையகக் கட்டுப்பாட்டு மையம் இந்த விவகாரத்தைக் கையாண்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவரிடம் ஏற்கனவே மூன்று குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு வீடு புகுந்து திருடிய வழக்குகளும், ஒன்று அபாயகரமான ஆயுதங்கள் தொடர்பான வழக்கும் அடங்கும். தற்போது இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் (கொலை) விசாரிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி முஹம்மது ரம்லியை 012-9392198 என்ற எண்ணிலோ அல்லது கிள்ளான் வடக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 03-32912222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.