அரசுக்கு எதிரான சதி குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை ஜெனரல் கைது

5 ஜனவரி 2026, 8:31 AM
அரசுக்கு எதிரான சதி குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை ஜெனரல் கைது

மணிலா, ஜனவரி 5 - அரசாங்கத்திற்கு எதிரான நிலைமை சீர்குலைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக, ஓய்வுபெற்ற விமானப்படை மேஜர் ஜெனரல் ரோமியோ போக்விஸை பிலிப்பைன்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது.

தேசத்துரோகத்தைத் தூண்டிய குற்றங்களுக்காக நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் பேரில், தாய்லாந்து பேங்காக்கில் விடுமுறையை முடித்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் போக்விஸை, குற்றப் புலனாய்வு மற்றும் கண்டறிதல் குழுவின் அதிகாரிகள் நினோய் அக்வினோ அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் மணிலாவில் அவரது குழு ஏற்பாடு செய்திருந்த ஒரு போராட்டக் கூட்டத்தில், ஆயுதப்படை உறுப்பினர்களை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அவர் தூண்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போக்விஸ் பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறையின் தேசிய தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பதிவு மற்றும் ஆவணப்படுத்தும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.