போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு அதிகாரிகள், ஐந்து காவல்துறையினர் கைது

5 ஜனவரி 2026, 3:16 AM
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு அதிகாரிகள், ஐந்து  காவல்துறையினர் கைது

குவந்தான், ஜனவரி 5: மெந்தகாப் பகுதியிலுள்ள ஒரு கடையில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு இரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து காவல்துறையினர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவரும் அதிகாலை 2.15 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டதாக பகாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யாஹாயா ஓத்மான் கூறினார்.

“மேலும் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் அதிகாரி ஒருவர் மற்றும் ஐந்து காவல்துறையினரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது," என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

அவர்கள் 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 12(3) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1)(a) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். எந்தவொரு தவறான நடத்தைக்கும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களின் மேற்பார்வையாளர்களும் நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் யாஹாயா வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.