பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக அபு பக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்

29 டிசம்பர் 2025, 1:38 AM
பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக அபு பக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்

ஆராவ், டிச 29 - கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று பெர்லிஸ் மந்திரி புசார் முகமது ஷுக்ரி ராம்லி உடல்நலக் காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து, கோல பெர்லிஸ் சட்டடமன்ற உறுப்பினரான அபு பக்கார் ஹம்சா பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பெர்லிஸ் ராஜா, துவாங்கு சைட் சிராஜுடின் ஜமாலுல்லாயில் முன்னிலையில், பெர்லிசின் 12வது மந்திரி புசாராக அபு பக்கார் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பெர்லிஸ் மாநிலப் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவரான அபு பக்கார் முன்னதாக 15வது பொதுத் தேர்தலில் (GE15) கோல பெர்லிஸ் மாநில சட்டமன்ற (DUN) தொகுதியில் 154 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

பின், கடந்தாண்டு நவம்பர் மாதம் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தில் அபு பக்கார், சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் உட்புற மேம்பாடிற்கான புதிய ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.