பெர்லிஸ் மந்திரி புசார் சுக்ரி ராம்லி வீடு திரும்பினார்- பெர்லிசில் அரசியல் கொந்தளிப்பா?

24 டிசம்பர் 2025, 4:29 AM
பெர்லிஸ் மந்திரி புசார் சுக்ரி ராம்லி வீடு திரும்பினார்- பெர்லிசில் அரசியல் கொந்தளிப்பா?

கங்கார், டிச 24- பெர்லிஸ் மாநில மந்திரி புசார் சுக்ரி ராம்லி, மார்பு வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவலை அவர் தனது முகநூல் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்தார். "அல்ஹம்துலில்லாஹ். இன்று மாலை நான் பாதுகாப்பாக வீடு திரும்பினேன். எனது நலனுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக," என்று அவர் கூறினார்.

சுக்ரி இதற்கு முன்னர் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது மார்பு வலி ஏற்பட்டதால் கோலாலம்பூரில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் (ADUN) பெர்லிஸ் ராஜாவிடம் சட்டப்பூர்வ உறுதிமொழி (SD) சமர்ப்பித்து, சுக்ரிக்கு இனி ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்ததால், பெர்லிஸில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலை, பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஆளும் சட்டமன்றத்தில் சுக்ரி மந்திரி புசாராகத் தொடர்வதற்கான எளிய பெரும்பான்மையை அச்சுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

பெர்லிஸ் பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் ஷாஹிடன் காசிம் இன்று வலியுறுத்தியதாவது, சம்பந்தப்பட்ட நடவடிக்கை தனிநபர்கள் தொடர்பானது மட்டுமே என்றும், மத்திய தலைமைத்துவ மட்டத்தில் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ ஒப்புதலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.