‘ஓப் குத்திப்’ நடவடிக்கை: 31 பேர் கைது

12 டிசம்பர் 2025, 10:06 AM
‘ஓப் குத்திப்’ நடவடிக்கை: 31 பேர் கைது

கோலாலம்பூர், டிசம்பர் 12- நேற்று இரவு கோலாலம்பூர் குடிநுழைவு அதிகாரிகள் மஸ்ஜிட் ஜாமெக் பகுதியில் நடத்திய அதிரடிச் சோதனையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 7.20 மணியளவில், சுமார் 25 அதிகாரிகளுடன், ‘ஓப் குத்திப்’ என்ற அமலாக்க நடவடிக்கையானது மஸ்ஜிட் ஜாமெக்கின் குறிப்பிட்டு எல்ஆர்டி நிலையங்கள், தெருமுனைகள் உள்ளிட்ட பகுதிகளில், சந்தேகத்திற்கிடமாகச்நடத்தப்பட்டதாக அதன் இயக்குநர் வான் முகமட் ஸைனி வான் யுசோஃப் தெரிவித்தார்.

மேலும் சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 31 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும், புக்கிட் ஜாலில் குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.