தாவாவ், ஆக. 14 - இங்குள்ள ஜாலான் அபாஸ், கம்போங் பத்து 4 இல் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விருந்துக்குப் பிறகு நச்சுணவு பாதிப்பு காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்தது குறித்து காவல்துறை தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இறந்தவர்களின் 24 வயது உறவுக்கார பெண் ஒருவர் காலை 10.30 மணிக்கு புகார் செய்ததாக தாவாவ் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சாம்பின் பியூ தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கிராமத்தில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பிறகு தனது 36 வயது அத்தை மற்றும் ஒன்பது வயது மூத்த மகன் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என அவர் கூறினார்.
கணவரின் அறிக்கையின்படி, தனது மனைவி விருந்திலிருந்து சில உணவு வகைகளை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். அதை உண்ட பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள் மாலை வரை வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
உணவு நச்சுத்தன்மைக்கான சரியான காரணத்தை சுகாதார அமைச்சு இன்னும் ஆராய்ந்து வரும் அதே நேரத்தில் போலீஸ் தடயவியல் குழுவும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக சாம்பின் மேலும் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன அதில் காயத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
திருமண விருந்தில் நச்சுணவு பாதிப்பினால் இருவர் பலி - போலீஸ் விசாரணை
14 ஆகஸ்ட் 2025, 10:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
காணாமல் போன பணப்பையிலிருந்து 10,000 ரிங்கிட்டைத் திருடிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது
Latchumy Ramamoorthy
20 ஜூன் 2026

video
Boy dies after fall from seventh floor of Kajang apartment
Kathiravan Manoharan, Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் மரணம்
Evelyn Moses
16 ஜூன் 2026

selangor
வீட்டின் பின்புற சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுமியை போலீசார் மீட்டனர்
Pakiya
8 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



