வாஷிங்டன், ஆக. 7 - இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பிறப்பித்தார்.
அந்த நாடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 விழுக்காட்டு வரியுடன் கூடுதலாக இந்த வரி சேர்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை அமெரிக்க-இந்திய உறவுகளை மேலும் சிக்கலாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத இறுதியில் முதல் முறையாக சீனாவுக்குச் செல்வார் என்று இந்திய அரசாங்க வட்டாரம் கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறியதைத் தொடர்ந்து அமெரிக்க-இந்தியா உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த ரஷ்யாவை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிரம்பின் உயர்மட்ட அரசதந்திர தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் நடத்திய சந்திப்புகளைத் தொடர்ந்து திங்களன்று டிரம்ப் முதன்முதலில் வெளியிட்ட சமிக்ஞையின் அடையாளமாக வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால் ரஷ்யா மீது அதிக வரிகளையும் அதன் நட்பு நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளையும் விதிக்க நேரிடும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி- டிரம்ப் அதிரடி அறிவிப்பு
7 ஆகஸ்ட் 2025, 2:07 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் தெரிவித்தார்
Shalini Rajamogun
27 மார்ச் 2026

antarabangsa
ஈரானிய தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது
Shalini Rajamogun
1 மார்ச் 2026

selangor
மலேசியாவுக்கான அமெரிக்கா தூதரைத் திரும்பப் பெற்று கொண்டது அதிபர் டிரம்ப் நிர்வாகம்
Mavitthran
25 பிப்ரவரி 2026
antarabangsa
முக்கிய ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலியிருந்து வியட்நாம் நீக்கம்
Shalini Rajamogun
23 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?





