HEALTH

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 280 பேர் பாதிப்பு- எழுவர் மரணம்

21 ஜனவரி 2023, 7:34 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 280 பேர் பாதிப்பு- எழுவர் மரணம்

ஷா ஆலம், ஜன 21 நாட்டில் நேற்று 280 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஐந்து வெளிநாட்டுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. 

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஏழு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்றைய மரண எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 36,930 பேராக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 10,355 பேர் கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் 9,957 பேர் அல்லது 96.2 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 382 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 14 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று மொத்தம் 300 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 943 பேராக உயர்ந்துள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.