SELANGOR

மாநிலப் புத்தக கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, 6 நாட்களில் 160,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்

7 டிசம்பர் 2022, 8:58 AM
மாநிலப் புத்தக கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, 6 நாட்களில் 160,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், டிச 7: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (எம்பிஎஸ்ஏ) நடைபெற்ற சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022, டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இன்று வரை மொத்தம் 160,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு 300,000 பார்வையாளர்கள் வருகை புரிவர் என்ற இலக்கை அடைய முடியும் என்று டத்தின் படுக்கா மஸ்துரா முகமட் (Datin Paduka Mastura Muhamad) நம்புகிறார், ஏனெனில் இந்நிகழ்வு நிறைவடைய இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன.

"வேலை நாட்களில் கூட, பார்வையாளர்களின் வருகை திருப்திகரமாக உள்ளது. இன்று காலையில் 24 பேருந்துகளிலிருந்து மாணவர்கள் வந்துள்ளனர்" என்று சிலாங்கோர்கினியைச் சந்தித்தபோது கூறினார்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பார்வையாளர்களுக்காக பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் தயார் செய்யப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2006ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியின் தொடர்ச்சியாக, பிபிஏஎஸ் மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி முதல் முறையாக நடத்தப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.