SELANGOR

ஷா ஆலம் ஒரு ஸ்மார்ட் நகராமாக மாற்றப்படும் – ஷா ஆலம் 10வது மேயர்

6 டிசம்பர் 2022, 3:17 AM
ஷா ஆலம் ஒரு ஸ்மார்ட் நகராமாக மாற்றப்படும் – ஷா ஆலம் 10வது மேயர்

ஷா ஆலம், டிசம்பர் 6: சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதற்கு

இணங்க, , ஷா ஆலமை தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த, மக்கள் வாழ ஏற்ற

இடமாக மற்றும் வளமான நகரமாக மாற்றுவதாக ஷா ஆலமின் புதிய மேயர் உறுதியாக

உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தில் இவ்விலக்கு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹலிம் கூறினார்.

குடியிருப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆகியோரின்

வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நகராட்சி சேவைகளில் டிஜிட்டல்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஒரு ஸ்மார்ட் நகரமாகக் கருதப்படும்.

செட்டல், ஐ-அசெட், பணமில்லா கொடுப்பனவுகள் மற்றும் ஷா ஆலமில் ஸ்மார்ட்

கண்காணிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி வாகன

நிறுத்துமிடக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நாங்கள் டிஜிட்டல்

மயமாக்கி வருகிறோம்,`` என்று அவர் கூறினார்.

இன்று விஸ்மா எம்பிஎஸ்ஏயில் 10வது மேயராக பதவியேற்றப் பிறகு அவர் பேசினார்.

இதற்கிடையில், ஷா ஆலம் வாழத் தகுதியான நகரமாக இருப்பதை உறுதிசெய்வதற்கு

வசதியை வழங்கும் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்

புதுமைகளைப் பல்வகைப்படுத்துவதுடன், தற்போதுள்ளச் சேவைகளை தனது கட்சி

வலுப்படுத்தும் என்று நோர் ஃபுவாட் கூறினார்.

இந்த அம்சம் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்

மற்றும் பள்ளிகள் என விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.