SELANGOR

ஷா ஆலமின் புதிய மேயராக நோர் ஃபுவாட் நியமிக்கப்பட்டார்

1 டிசம்பர் 2022, 9:15 AM
ஷா ஆலமின் புதிய மேயராக நோர் ஃபுவாட் நியமிக்கப்பட்டார்

ஷா ஆலம், டிச. 1: சிலாங்கூர் மாநில அரசின் முன்னாள் துணைச் செயலாளர் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமீத், ஷா ஆலமின் புதிய மேயராக இன்று பதவிக்கு வந்துள்ளார்.

ஆணை வழங்குதல் மற்றும் நியமனக் கடிதம் வழங்கும்  வைபவத்தில், சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் அவர்களால் ஆணை  வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில அரசாங்கச் செயலாளர் அலுவலகம் முகநூல் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.

நோர் ஃபுவாட் ஒருமுறை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் துணை அரசாங்க செயலாளர் மற்றும் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் இயக்குனராக இருந்துள்ளார்.

ஜூன் 14 2021 யிலிருந்து பதவியில் இருந்த டத்தோ ஜமானி அகமது மன்சூருக்குப் பதிலாக அவர் ஷா ஆலம் மேயராக நியமிக்கப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.