ALAM SEKITAR & CUACA

மூன்று மாநிலங்களில் 955 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் எண்ணிக்கை அப்படியே உள்ளது

24 நவம்பர் 2022, 6:09 AM
மூன்று மாநிலங்களில் 955 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலாங்கூரில் எண்ணிக்கை அப்படியே உள்ளது

ஷா ஆலம், நவ 24: இன்று காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, 15 தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) 283 குடும்பங்களைச் சேர்ந்த 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேராக்கில் நான்கு மாவட்டங்களிலும், சிலாங்கூரில் இரண்டு மாவட்டங்களிலும், ஜோகூரில் ஒரு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) பேஸ்புக் வழியாக அறிவித்தது.

பேராக்கில் நேற்று இரவு 603 பேராக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

" சிலாங்கூரில் 317 பேர் மற்றும் ஜோகூரில் 35 பேர் என இரண்டு மாநிலங்களின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை," என்று அவர் கூறினார்.

முன்னதாக, கோலா கெடா நகரில் நேற்று நள்ளிரவு 12.40 மணி அளவில் கடல் நீர் 2.95 மீட்டர் (மீ) உயரத்தை எட்டியது மற்றும் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அந்த பகுதிகளில் கோலா கெடா ஃபெர்ரி டெர்மினல், தாமான் ஸ்ரீ புத்ரா, பசார் கோத்தா மெரினா மற்றும் பெக்கான் கோலா கெடா ஆகியவை அடங்கும்.

எவ்வாறாயினும், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதிக்கப்படவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.