கோம்பாக் 15 நவ: கோம்பாக் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள கல்வி, கணினி வசதி அற்ற மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மூலம் கிடைக்க இருக்கும் 10,000 மடிக்கணினிகள் கல்வி மற்றும் தொழிலுக்கு உற்சாகமூட்டும் செயல்.
கோம்பாக் செத்தியா தேசிய உயர்நிலைப் பள்ளி (எஸ்எம்கே) மாணவி எம் கௌசல்யா, 15, கட்டுப்பாட்டு ஆணையின் போது ஆன்லைன் கற்றலைப் பின்பற்ற முடியாமல் பின்தங்கிய ஆயிரக்கணக்கான மாணவர்களில் தானும் ஒருவர் என்று ஒப்புக்கொண்டார்.
[caption id="attachment_474971" align="alignleft" width="245"]
எம் கௌசல்யா, 15[/caption]
“அப்போது நான் மற்ற உடன்பிறப்புகளுடன் தொலைபேசியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது, படிப்பது கடினம். அமிருடின் மாணவர்களுக்கு 10,000 மடிக்கணினிகள் வழங்க விரும்புகிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அவர் கூறினார்.
எஸ்எம்கே சுங்கை புசு பள்ளி மாணவன் அகமது நஜ்மி அகமது மஸ்டி (16) இந்த வாய்ப்பை வரவேற்றார், ஏனெனில் இது அவர்களின் கல்வி நிலையை மேம்படுத்த உதவும் என்றார்
"இப்போது மாணவர்களுக்கு லேப்டாப் அவசியமாக உள்ளது, ஏனெனில் நிறைய தகவல்களை எளிதாக பெறலாம்," என்று அவர் கூறினார்.
ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக மேலாண்மை மாணவர் ஜே நிவாசன், 18, இந்த உதவி இளைஞர்கள் ஆன்லைனில் வணிகங்களை நடத்துவதை எளிதாக்கும் என்றார்.
[caption id="attachment_474972" align="alignright" width="210"]
ஜே நிவாசன், 18[/caption]
"இப்போது நான் ஆன்லைனில் படிக்க தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துகிறேன், ஏதேனும் ஒரு பணி இருந்தால் நண்பரின் கணினியை கடன் வாங்க வேண்டும்," என்று செலாயாங் பாருவில் இருந்து வந்த அவர் கூறினார்.
கோம்பாக்கின் கௌரவ பிரகடனம் மூலம், பக்காத்தான் ஹராப்பான் கோம்பாக் வேட்பாளரும் அமிருடின் கல்வி மற்றும் தொழில் முனைவோர் நோக்கங்களுக்காக 10,000 மடிக்கணினிகள் மற்றும் சாதனங்கள் வழங்க வாக்குறுதி அளித்தார்.


