ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் நான்கு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

12 நவம்பர் 2022, 3:54 AM
சிலாங்கூரில் நான்கு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன

ஷா ஆலம், நவ 12- சிலாங்கூரில் மேலும் ஒரு வெள்ள நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மையத்துடன் சேர்த்து மாநிலத்தில் நேற்றிரவு 10.15 மணி வரை திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கிள்ளானில் ஜோஹான் செத்தியா தேசிய பள்ளி, சுங்கை பிஞ்சாய் தேசிய பள்ளி மற்றும் பெக்கான் மேரு ஆரம்ப சமயப் பள்ளியும் ஷா ஆலமில் கம்போங் புடிமான் அல்-ஃபாலா பள்ளிவாசலும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

அந்த அனைத்து நான்கு துயர் துடைப்பு மையங்களிலும் 192 குடும்பங்களைச் சேர்ந்த 817 பேர் தங்கியுள்ளனர். மிக அதிகமானோர் அதாவது 638 பேர் சுங்கை பிஞ்சாய்  மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இவை தவிர ஜோஹான் செத்தியா துயர் துடைப்பு மையத்தில் 147 பேரும் கம்போங் புடிமான் அல்-ஃபாலா பள்ளிவாசலில் 32 பேரும் தங்கியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.