ALAM SEKITAR & CUACA

மழைக்குப் பிறகு நதி நீர் மட்டத்தை மாநில அரசு கண்காணித்து, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது

9 நவம்பர் 2022, 9:23 AM
மழைக்குப் பிறகு நதி நீர் மட்டத்தை மாநில அரசு கண்காணித்து, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது

ஷா ஆலம், நவ 9: கனமழையால் நதி நீர் மட்டம் உயர்வதை மாநில அரசு கண்காணித்து வருகிறது.

டத்தோ மந்திரி புசார், மாநிலத்தில் நிகழக்கூடிய எந்தவொரு நிகழ்விற்கும் தனது தரப்பு தயாராக இருப்பதாக கூறினார்.

“தொடர் கனமழையால் சிலாங்கூரில் சில நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவது குறித்து மாநில பேரிடர் குழுவின் தலைவர் டத்தோ ஹாரிஸ் காசிமுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன்.

"தற்போதைய நிலைமையை மாநில அரசு கண்காணித்து எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராகும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ட்விட்டரில் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் சமூக ஊடகங்கள் வழியாக இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவின் நிலைமையைப் பகிர்ந்து கொண்டார்.

"இன்று மதியம் 6.45 மணிக்கு தாமான் ஸ்ரீ மூடாவின் தற்போதைய நிலவரப்படி தண்ணீர் பம்ப் நன்றாக வேலை செய்கிறது. கடல் பெருக்கு நிகழ்வதால் ஆற்றில் நீர் மிகவும் அதிகமாக உள்ளது. வெள்ள நிலைமையை அவ்வப்போது அறிவிப்பேன்,'' என்றார்.

அக்டோபர் 12 அன்று, இந்த ஆண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்கொள்ள தயார் செய்யுமாறு மாநில அரசுக்குத் அமிருடின் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் பெரும் வெள்ளத்தை சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.