ALAM SEKITAR & CUACA

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநிலம் தயாராக உள்ளது

9 அக்டோபர் 2022, 10:37 AM
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநிலம் தயாராக உள்ளது

ஷா ஆலம், அக்.9: வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி அக்டோபர் 12-ம் தேதி வரை எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் மாநில அரசு உள்ளது.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் கிராபிக்ஸ் மூலம் டத்தோ மந்திரி புசார், சுற்றுச்சூழலின்  நிலை குறித்து பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 12 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையின் போது அவசர காலங்களில் இந்த முக்கியமான எண்களை வைத்திருக்குமாறு கிள்ளான் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எந்த சாத்தியக்கூறுகளுக்கும் மாநில அரசு தயாராக உள்ளது; என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாறும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது, இம்மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி டிசம்பர் வரை 100 முதல் 400 மில்லிமீட்டர் (மிமீ) மழைவீதம் இருக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.