ALAM SEKITAR & CUACA

சர்வதேச வன தினத்துடன் இணைந்து மரம் நடும் திட்டத்தை ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

25 செப்டெம்பர் 2022, 9:44 AM
சர்வதேச வன தினத்துடன் இணைந்து மரம் நடும் திட்டத்தை ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

செமினி, செப்டம்பர் 25: சிலாங்கூர் மாநிலத்தின் சர்வதேச வன தினத்துடன் இணைந்து மரம் நடும் திட்டத்தை சிலாங்கூர் ராஜா மூடா அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

புக்கிட் ப்ரோகா மலை அடிவாரத்திற்கு தெங்கு அமீர் ஷா வருகை தந்தார். டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் மற்றும் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லாய் சியான் ஆகியோர் உடன் சென்றனர்.

மேலும் தீபகற்ப மலேசியா வனத்துறை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ரிட்சா அவாங் மற்றும் சிலாங்கூர் மாநில வனத்துறை இயக்குநர் டத்தோ அகமது ஃபாட்சில் அப்துல் மஜிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே நிகழ்வில், சிலாங்கூர் அளவிலான மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து, வன கண்காட்சி தளத்தைப் பார்வையிடும் முன், சிறந்த படைப்பாளி போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கினார்.

பின்னர் மாநில அளவில் சர்வதேச வன தினத்தை கொண்டாடுவதன் அடையாளமாக ராஜா மூடா மரம் நட்டார்.

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் நிகழ்ச்சியில்  உரை  நிகழ்த்தும் போது, 2.6 கோடி மரம் நடும் திட்டத்தை வெற்றியடையச் செய்ய அனைத்து மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2001 இல் தொடங்கிய சிலாங்கூர் சுல்தானின் 26 ஆண்டுகால ஆட்சிக்கு ஏற்ப 2.6 கோடி  மரங்களை நடும் இலக்கு என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.