ECONOMY

மலேசிய ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து

16 செப்டெம்பர் 2022, 5:53 AM
மலேசிய ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர், செப் 16 - இன்று அனுசரிக்கப்படும் 89வது மலேசிய ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடீன் அல்-முஸ்தபா பில்லா ஷா  உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் மற்றும் ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்களுக்கு தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் உறுதி செய்வதில் தற்போதைய மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் செய்த சேவைகள் மற்றும் தியாகங்களுக்கு தாம் மனமார்ந்த பாராட்டுகளைத்  தெரிவித்துக் கொள்வதாக ஆயுதப் படையின் உச்ச தளபதியான சுல்தான் அப்துல்லா கூறினார். நாட்டின்

இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதுகாக்கும் வேளையில்  கொல்லப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு மாமன்னர் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மாமன்னரின் இந்த வாழ்த்து இடம் பெற்றுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.