ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் கார்பன் அளவை குறைக்க மூன்று திட்ட இலக்குகள் மீது கவனம் செலுத்தப்படும் 

25 ஜூலை 2022, 8:21 AM
சிலாங்கூரில் கார்பன் அளவை குறைக்க மூன்று திட்ட இலக்குகள் மீது கவனம் செலுத்தப்படும் 

ஷா ஆலம், ஜூலை 25- வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் அளவை 45 விழுக்காடாக குறைக்க மூன்று திட்ட இலக்குகள் மீது மாநில அரசு கவனம் செலுத்தும்.

இந்த இலக்கை அடைய எரிசக்தி திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய மூன்று திட்டங்கள் பரிசீலிக்கப்படுவதாக பருவநிலை மாற்றத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

எரிசக்தி திறன் நடவடிக்கையின் வாயிலாக எரிசக்தியை குறைவாக பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துவது, தொழில்துறைகள் சுத்தமான உற்பத்தி நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் குறைவான எரிசக்தியைப் பயன்படுத்துவது ஆகிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் மின் ஹைட்ரோ, சூரிய ஒளி எரிசக்தி, உயிரியல் எரிவாயு போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் வாயிலாக மேலும் அதிகமாக எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் இல்லாத நாடாக மாற்றும் திட்டத்தில் சிலாங்கூரின் கடப்பாடு என்ன என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கேள்வியெழுப்பியிருந்தார்.

சிலாங்கூரைப் பொறுத்த வரை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் மிக அதிகமாக அதாவது 34 லட்சம் டன் கரியமிலவாயு வெளியேற்றப்படுவதாக ஹீ லோய் சியான் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நிலையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (24 லட்சம் டன் கரிமிலவாயு). கோல லங்காட் நகராண்மை கழகம் 816,347 டன் கரியமிலவாயு) ஆகிய ஊராட்சி மன்றங்கள் உள்ளன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.