ஷா ஆலம், ஜூன் 14- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யு.ஐ.டி.எம்.) வேந்தரான மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினை அந்த உயர்கல்விக் கூடத்தின் இணை வேந்தராக நியமனம் செய்தார்.
யு.ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தின் துங்கு வேந்தர் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 93து பட்டமளிப்பு விழாவின் போது தெங்கு பெர்மைசூரிக்கு இந்த உயரிய பதவி வழங்கப்பட்டது.
இந்த நியமனம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 2024 அக்டோபர் 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த நிகழ்வில் பேரரசியார் துங்கு ஹாஜா அமினா மைமுனாவும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானும் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 169 பேர் முனைவர் பட்டங்களையும் 1,243 பேர் முதுகலைப் பட்டங்களையும் 62 நிபுணத்துவ பட்டங்களையும் 163 பேர் டிப்ளோமாவுக்கு பிந்தைய பட்டங்களையும் 9,024 பேர் இளங்கலைப் பட்டங்களையும 16,626 பேர் டிப்ளோமாக்களையும் பெற்றனர்.


