ANTARABANGSA

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றச் சிறார்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்வு

22 மே 2022, 5:19 AM
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றச் சிறார்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உயர்வு

கோலாலம்பூர், மே 22- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 499 பேர் அல்லது 31.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 47.1 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 16 லட்சத்து 71 ஆயிரத்து 928  பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது..

நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரத்து 909 பேர் அல்லது 68.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 72 ஆயிரத்து 623 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 575 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பன்னிரண்டு முதல் 17 வயது வரையிலான இளையோரில் 93.5 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 9 ஆயிரத்து 039 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 96.6 விழுக்காட்டினர் அல்லது 30 லட்சத்து 5 ஆயிரத்து 679 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 20,860 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 7,296  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 12,179 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 1,385 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 7 லட்சத்து 84 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 3 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.