ECONOMY

பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசு RM2.65 கோடி ஒதுக்கியது

21 மே 2022, 12:54 PM
பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசு RM2.65 கோடி ஒதுக்கியது

ஷா ஆலம், மே 21 - சிலாங்கூரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு RM2.65 கோடி ஒதுக்கியுள்ளது.

குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து முழு உதவி பெறாத பள்ளிகளுக்கு இந்த பங்களிப்பு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இதற்கு முன் பல பள்ளிகளுக்குச் சென்றபோது, முழு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நல்ல கல்வி உள்கட்டமைப்பைத் தயாரிப்பதில் மாநில அரசு உட்பட பல்வேறு தரப்பினரின் ஆதரவு தேவை என்பதை நான் கவனித்தேன்," என்று அவர் கூறினார்.

இன்று முன்னதாக சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தில் உள்ள டேவான் ஜூப்லி பேராக்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா 2022 மற்றும் சிலாங்கூர் மக்கள் பயிற்சித் திட்டத்தை (PTRS) துவக்கி வைத்து அமிருடின் கூறினார்.

இந்தப் பாடசாலைகளின் முன்னேற்றத் தேவைகளை ஆதரிப்பதற்காக பல விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து, இந்தப் பாடசாலைகளுக்கு உதவிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், சிலாங்கூரில் உள்ள 637 பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த மாநில அரசு RM2.4 கோடியினை விநியோகித்தது.

சமய ஆரம்ப பள்ளிகளுக்கு தோராயமாக 93 லட்சம் ரிங்கிட், சீன வட்டார மொழி பள்ளிகளுக்கு 90 லட்சம் ரிங்கிட் மற்றும் ஆரம்ப  தமிழ்மொழி பள்ளிகளுக்கு 45 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.