ECONOMY

மாநில அரசின் பரிவுமிக்க வணிக மெகா விற்பனை திட்டம் கோழி விற்பனையில் கவனம் செலுத்தும் 

11 மே 2022, 12:50 PM
மாநில அரசின் பரிவுமிக்க வணிக மெகா விற்பனை திட்டம் கோழி விற்பனையில் கவனம் செலுத்தும் 

ஷா ஆலம், மே 11: பண்டிகைக் காலத்தில் நடைபெற்ற மாநில அரசின் பரிவுமிக்க வணிக மெகா விற்பனைக்கு பின்  கோழி விற்பனையில் கவனம் செலுத்தவுள்ளது.

மக்கள் மலிவான விலையில் கோழியை வாங்க உதவுவதே இதன் நோக்கம் என்று நவீனமயமாக்கல் மற்றும் விவசாய அடிப்படையிலான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

ஹஜிப் பெருநாள் நெருங்கும் வேளையில் "மாட்டு இறைச்சியைப் பற்றி கவலைப்படவில்லை, ஏனென்றால் நாங்கள்  அதற்கான  ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளோம், எனவே நாங்கள் கோழிகள் மீது கவனம் செலுத்துவோம்" என்று இஸாம் ஹாஷிம் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஹரி ராயா கொண்டாட்டத்தையொட்டி, மாநிலம் முழுவதும் 29 இடங்களில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் அடிப்படைப் பொருட்கள் பெரிய அளவிலான விற்பனை நடைபெற்றது.

23,200 புதிய கோழிகள், 23,200 (கிலோ) திட மாட்டு இறைச்சி, மாட்டிறைச்சி எலும்புகள் (16,700 கிலோ), கிரேடு பி கோழி முட்டைகள் (18,200 பலகைகள்), பாக்கெட் சமையல் எண்ணெய் (25,200 கிலோ) மற்றும் 1,500 கிலோ செலாயாங் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.