ECONOMY

200 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் செமினியில் 15 பாத்திரத்தில் டோடோல் தயாரித்தனர்

10 மே 2022, 11:59 AM
200 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் செமினியில் 15 பாத்திரத்தில் டோடோல் தயாரித்தனர்

ஷா ஆலம், மே 10: கடந்த மாதம் செமினியில் டோடோல் வாகன்சா 4.0 திட்டத்தின் மூலம் 15 பாத்திரத்தில் 200 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் டோடோல் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

காஜாங் முனிசிபல் கவுன்சில் எம்பிகேஜே வின்  20 வது மண்டலக் குடியிருப்போர் மற்றும் மண்டலப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து  இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்  கூறினார்.

“இந்தத் திட்டம் செமினியைச் சுற்றியுள்ள தன்னார்வலர்களை உள்ளடக்கியது.

"பல்வேறு இனங்களைச் சேர்ந்த மொத்தம் 200 தன்னார்வலர்கள் கூட்டாக 15 பாத்திரத்தில்  டோடோல் தயாரித்துள்ளனர்" என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.

இந்தத் திட்டம் தன்னார்வத் தொண்டின் உணர்வைத் தூண்டியது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் உள்ளூர் தலைவர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதனை நோக்கமாகக்  கொண்டது என்றார்  அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.