HEALTH

873,409 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்

5 மே 2022, 12:47 PM
873,409 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 5: நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் மொத்தம் 873,409 பேர் அல்லது 24.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் படி, 15 லட்சத்து 37 ஆயிரத்து 190 சிறுவர்கள் அல்லது 43.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், 28 லட்சத்து 94 ஆயிரத்து 915 பேர் அல்லது 93 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 92 ஆயிரத்து 659 பேர் அல்லது 96.1 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

வயது வந்தவர்களில், 1 கோடியே 60 லட்சத்து 36 ஆயிரத்து 713 பேர் அல்லது 68.2 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் ஊசியைப் பெற்றனர், அதே நேரத்தில் 2 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 350 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸை முடித்தனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 555 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நேற்று, 2,151 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இதில் 376  முதல் டோஸ்கள், 1,337 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 438பூஸ்டர் டோஸ்கள், தேசிய நோய் தடுப்பு திட்டம்-19 இன் கீழ் வழங்கப்பட்ட மொத்த  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 3 லட்சத்து 32 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று மூன்று இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.