ECONOMY

பெருந்தொற்று காலத்தில் இ-வாலட் பரிவர்த்தனை 131 விழுக்காடு அதிகரிப்பு

19 ஏப்ரல் 2022, 5:09 AM
பெருந்தொற்று காலத்தில் இ-வாலட் பரிவர்த்தனை 131 விழுக்காடு அதிகரிப்பு

லாபுவான், ஏப் 19- இ-வாலட் எனப்படும் இணைய பரிமாற்றப் பயன்பாடு கடந்த 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 131 விழுக்காடு அதிகரித்து கடந்தாண்டில் 60 கோடி பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கட்டணம் செலுத்துவது மற்றும் பொருள் வாங்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்கு ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தும் மலேசியர்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 11 விழுக்காடு குறைந்துள்ளதை 2022 ஆம் ஆண்டிற்கான பெய்நேட் அறிக்கை காட்டுவதாக அவர் சொன்னார்.

பெருந்தொற்று பரவலுக்கு முன்னர் பரிவர்த்தனைகளுக்கு ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 89 விழுக்காடாக இருந்த வேளையில் கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 78 விழுக்காடாக குறைந்தாக அவர் தெரிவித்தார்.

ரொக்கமின்றி இணையம் வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பழக்கத்தை மலேசியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதோடு எதிர்காலத்தில் இது மலேசியர்கள் மத்தியில் ஒரு கலாசாராமாகவும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

இதன் அடிப்படையில் சில்லறை விற்பனைத் தொழில்துறையில் இலக்கவியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.